29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி

மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.#

தம்புள்ளையில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதினபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.இந்த நிலையில் 141 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்ததுதுடுப்பாட்டத்தில் சமரி அத்தபத்து 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய 2024ஆம் ஆண்டுக்கான மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles