
2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடரில், தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில் போட்டியை நடத்தும் கட்டார் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. காட்டார் அணி தனது முதல் போட்டியில் ஈக்வடாரிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. உலகக்கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தமை இதுவே முதன்முறையாகும். இதனைத் தொடர்ந்துஇ 2வது லீக் சுற்றில் செனக்கல் அணியை எதிர்கொண்ட கட்டார் அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதனைத்தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்கிழமை நெதர்லாந்து அணியை கட்டார் அணி எதிர்கொள்ளவிருந்த நிலையில் முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்ததால் குழு ‘ஏ’ புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ள கட்டார் அணிஇ அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்ததுடன்இ உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் வெளியேறியுள்ளது.