உலக ஓட்டிசம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

0
238

உலக ஓட்டிசம் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு கல்லூரி பிரதி அதிபர் அருட்தந்தை மொரிசன் அடிகளாரின் தலைமையில் இன்று இடம்பெற்றது.


ஏப்ரல் 2 ஆம் திகதி உலக ஓட்டிசம் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு, வருடந்தோறும் ஏப்ரல் மாதம் ஓட்டிசம் விழிப்புணர்வு மாத
நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இவ் விழிப்புணர்வு செயல் திட்டத்தின் கீழ் இன்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான உட்படுத்துகை விழிப்புணர்வு நிகழ்வு
முன்னெடுக்கப்பட்டது.


மட்டக்களப்பு தீரனியம் திறந்த பயிற்சி பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் மைக்கல், தீரனியம் பாடசாலையின் உளநல மருத்துவ ஆலோசகர் வைத்திய நிபுணர் ஜூடி ஜெயகுமார் ,அருட்சகோதரர் ஸ்டீபன் மெதிவு ஆகியோரின் வழிநடத்தலில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.