26.2 C
Colombo
Sunday, May 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கவை – வைத்தியர் ஜயருவன் பண்டார

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கவையாக மாறியுள்ளதாகச் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது செயலிழந்து காணப்படும் பி.சி. ஆர் பரிசோதனை இயந்திரத்தை மீண்டும் செயற்படுத்துவதற்காகச் சீன விசேட வல்லுநர்கள் இன்று இலங்கை வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், தனிமைப்படுத்தல் என்பது சிறை வாழ்க்கை அல்ல என்றும் அது இந்த சமூகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு விசேட செய்முறையெனவும் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.(PR)

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles