காஸா பகுதியில் நிலவும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளது.இதன் காரணமாக இலங்கையிலும் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் நிலவுவதாக கூறப்படுகிறது.முன்னதாக கடந்த 5ஆம் திகதி எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 343 ரூபா அதிகரிக்கப்பட்டு 3,470 ரூபாவுக்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 137 ரூபா அதிகரிக்கப்பட்டு 1,393 ரூபாவுக்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 63 ரூபா அதிகரிக்கப்பட்டு 650 ரூபாவுக்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.லாஃப் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் தற்போது 3,985 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.அடுத்த மாதம் ஐந்தாம் திகதி மீண்டும் எரிவாயு விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.