28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சிம் அப்ரோ டி10 லீக் தொடரில் இலங்கையின் 12 வீரர்கள் பங்கேற்பு

சிம்பாப்வே கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் 2வது தடவையாக சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள சிம் அப்ரோ டி10 லீக் தொடரில் இலங்கையின் 12 வீரர்கள் விளையாடவுள்ளனர். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக போல்ட்ஸ் ஹராரே அணிக்காகவும், குசல் பெரேரா பங்ளா டைகர்ஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் தற்போதைய தலைவர் சரித் அசலங்க பங்ளா டைகர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், திசர பெரேரா மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் முறையே நியூவ் யோர்க் ஸ்ரைக்கர்ஸ் மற்றும் புலவாயோ பிராவோ ஜகுவார் அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இளம் வீரர்களான சினெத் ஜயவர்தன, விஹாஸ் தெவ்மிக, கெவின் கொத்திகொட, கவீஷ சத்ஷர மற்றும் ரவீன் டி சில்வா ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

போட்டிகள் எதிர்வரும் 21ம் திகதி முதல் 29ம் திகதிவரை ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது. கேப் டவுண் சேம்ப் ஆர்மி அணியில் சினெத் ஜயவர்தன, போல்ட்ஸ் ஹராரே அணியில் தசுன் ஷானக, ஜனிஷ்க பெரேரா, பங்ளா டைகர்ஸ் அணியில் குசல் பெரேரா, சரித் அசலங்க, கெவின் கொத்திகொட, டர்பன் வோல்வ்ஸ் அணியில் ரவீன் டி சில்வா, புலவாயோ பிராவோ ஜகுவார்ஸ் அணியில் அகில தனன்ஜய, விஹாஸ் தெவ்மிக, நியூவ் யோர்க் ஸ்ரைக்கர்ஸ் அணியில் திசர பெரேரா, பினுர பெர்னாண்டோ, கவீஷ சத்ஷர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles