புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் தொழிற்சங்க ஒன்றியத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களின் கோரிக்கைக்கு அமையவே ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்