சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்றிரவு யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் பிரசாங்களில் பங்கேற்பதாக நேற்று யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என நம்புவதாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.