28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருக்கோவிலில் கலாசார மத்திய நிலையத்தில் கற்கை நெறிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அம்பாறை திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் கலைகள் மற்றும் ஆங்கிலம் சிங்களம் ஆகிய துறைககளில் கற்கைகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வானது திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் கே.இரவிந்திரன் தலைமையில் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தின் ஊடாக புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்டு வரும் கலைத்துறை மற்றும் மொழிகள் போன்ற கற்கை நெறிகளில் தேசிய மற்றும் மாவட்ட, பிரதேச ரீதியாக தமது ஆளுமைகளை வெளிக்காட்டிய மாணவ மாணவிகள் மற்றும் நிலையத்தின் வளவாளர்கள் ஆகியோருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் கலந்து சிறப்பித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles