27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

துபாய் வலையமைப்பின் ஊடாக போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!

சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான  காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் துபாய் நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்  என்றும் பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொரகஹேன கோரல  பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி வீடு ஒன்றில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles