தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவனுக்கு அமோக வரவேற்பு!

0
137

பாடசாலை மாணவர்களுக்கிடையே, தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட அரை மரதன் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவன், சுமன் கீரனிற்கு வரவேற்பளிக்கப்பட்டது. பல்லவராஜன் கட்டு சந்தியில் இருந்து வாகன அணிவகுப்பில் மாணவனின் பாடசாலைக்கு கிராம மக்கள் அழைத்துச் சென்றனர். மாணவனின் சொந்தக் கிராம மக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் இவ் வரவேற்பு நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.