தொற்றா நோய்கள் தொடர்பில், பாடசாலை மாணவர்கள் இடையே விழிப்புணர்வையேற்படுத்தும் நோக்குடன்;, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன.
சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் அனுசரணையுடன் கல்வி திணைக்களத்துடன் இணைந்து தேசிய ரீதியில் இப் பரீட்சைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரனின் வழிகாட்டலில் தொற்றா நோய் பிரிவின் ஏற்பாட்டில், மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களிலும், போட்டிப் பரீட்சைகள், தொற்றா நோய் பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் இ. உதயகுமார் தலைமையில் இன்று நடாத்தப்பட்டன.
மட்டக்களப்பு கல்வி வலய உடற் கல்வி உதவிப் பணிப்பாளர் லவகுமார் உட்பட உடற் கல்விப் பொறுப்பாசிரியர்களும் கலந்துகொண்டனர்.