26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

புதிய விமானப்படை தளபதி பிரதமருடன் இன்று சந்திப்பு

புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண இன்று (2020.11.09) திங்கட்கிழமை விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தார்.

18ஆவது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண, உத்தியோகப்பூர்வமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

புதிய விமானப்படை தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் பாதுகாப்பு மற்றும் விமானப்படையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

புதிய விமானப்படை தளபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் பாதுகாப்பு மற்றும் விமானப்படையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

இவ்வுலகத்துக்கு ஏற்றவகையில் இலங்கை விமானப்படையை முன்னேற்றப் பாதையில் நகர்த்துதல் மற்றும் தேசிய பொறுப்புக்களை நிறைவேற்றுதல் தொடர்பில் புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண நம்பிக்கை வெளியிட்டார்.

முழு உலகிற்கும் அச்சுறுத்தலாகியுள்ள கொரோனா தொற்று அச்சநிலையிலிருந்து நாட்டு மக்களை விடுவிக்க இலங்கை விமானப்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் இதன்போது பாராட்டினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles