போலியான சீன கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயன்ற இந்திய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அல்ஜசீரா விமான நிறுவனத்தின் கருமபீட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்தமையினால் 43 வயதான ஆணும் 39 வயதான பெண் ஒருவரும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கடந்த 26ஆம் திகதி இண்டிகோ விமானம் மூலம் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்தநிலையில், அவர்கள் தரகர் ஒருவரினூடாக 6 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலுத்தி போலி கடவுச்சீட்டை தயாரித்துள்ளதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.