26.5 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் எகட் கரித்தாஸ் நிறுவனத்தால் ஒருநாள் பொதுச்சந்தை!

‘உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்போம், சத்துணவு தரும் ஆரோக்கியத்தை வளர்த்தெடுப்போம்’ எனும் தொனிப் பொருளில், எகட் கரித்தாஸ் நிறுவனத்தால், மட்டக்களப்பு ஜெயந்திரபுரத்தின் ஒருநாள் பொதுச்சந்தை வியாபர நடவடிக்கையொன்று ஒருங்கிணைக்கப்பட்டது.

எகட் கரித்தாஸ் நிறுவனம், சமாதான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், நிறுவன இயக்குனர் அருட்பணி ஜய நிக்சன் அடிகளார் தலைமையில் பொதுச் சந்தை வியாபார நடவடிக்கை ஒருங்கிணைக்கப்பட்டது. பிரதம அதிதியாக இயேசு சபை மேலாளர் அருட்பணி சகாயநாதன் அடிகளார் கலந்துகொண்டார். கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், சிறுதொழில் முயற்சியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டன.

கௌரவ அதியாக சிறிய குரு மட இயக்குனர் அருட்பணி யேசுதாசன் அடிகளார் மற்றும் சர்வ மத தலைவர்கள், விவசாய திணைக்கள அதிகாரிகள்,
விவசாய பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர், மட்டக்களப்பு எகட் கரித்தாஸ் நிறுவன உத்தியோகத்தர்கள், இளைஞர்,யுவதிகள்,
என பலரும் கலந்து கொண்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles