மீலாத் தினத்தையொட்டி மட்டக்களப்பு காத்தான்குடியில் இன ஐக்கிய மீலாத் விழா இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் விழா இடம்பெற்றது.
மீலாத் போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட சமயப் பிரமுகர்கள் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்புரையை அல்ஹாபிழ் மசூத் ஹாசிமி நிகழ்த்தியதுடன் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்த்தவ சமயப் பிரமுகர்களின் ஆசி உரைகளும் இடம் பெற்றன.
ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமன ஆலிம்கள் அமைப்பின் தலைவர் சாஜஹான் தலைமையில் நடைபெற்றவிழாவில் அரபுத்துறை பேராசிரியரும் பேராதனைப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான சலீம் நத்வி பிரதம விருந்தினராக
கலந்து கொண்டார். கல்வியலாளர்கள் உலமாக்கள், பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.