இளைஞர்களுக்கான டிஜிட்டல் பாதைகள் பற்றிய விழிப்புணர்வு நடைபவனியும் வீதி நாடகமும் இன்று மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்றது. உலக வாலிபர் தினத்தையொட்டி, அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையம் முறக்கொட்டாஞ்சேனை பரிசுத்த பவுல் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டது.
‘இளைஞர்களே டிஜிட்டல் பாதைகள் தொடர்பில் அறிந்திருங்கள்’ எனும் தொனிப்பொருளில் முறக்கொட்டாஞ்சேனை – அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையம் முன் ஆரம்பமான பேரிணி, சித்தாண்டி பிரதான வீதி வழியாக சித்தாண்டி சந்தியை வந்தடைந்தது. பேரணியைத் தொடர்ந்து சித்தாண்டி சந்தியில் விழிப்புணர்வு நாடகமும் ஆலய வாலிபர்களால் நிகழ்த்தப்பட்டது. ஆலயத்தின் இயக்குனர் அதன் முகாமையாளர் உட்பட பலரும் இதில் பங்கேற்றனர்