‘பனை நடுவோம் பயன் பெறுவோம்’ எனும் தொனிப்பொருளில், பனை விதைகளை நடும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு சித்தாண்டி சந்தனமடு ஆற்று பிரதேசத்தில் நடைபெற்றது.
சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளையானது இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
2015 ஆம் ஆண்டு தொடக்கம் மண்ணரிப்பு மற்றும் வெள்ளப் பெருக்கை தடுக்கும் முகமாக இச் செயற்திட்டத்தினை சந்தன மடு ஆற்றை அண்டிய பிரதேசங்களில் சிகண்டி அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இன்று 15 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.
சித்தாண்டியைச் சேர்ந்த ஆலய நிர்வாகத்தினர், விளையாட்டு கழகங்கள்,மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புக்களும் ஒன்றிணைந்து பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனர.