மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதியில்;, பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
அம்பாறை கல்முனையில் இருந்து இன்று அதிகாலை 1 மணிக்கு, மகரகம நோக்கிப் புறப்பட்ட பஸ், அதிகாலை 2 மணியளவில், மட்டக்களப்பு செங்கலடிப் பகுதியில், விபத்துக்குள்ளானது.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தால், பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியோரமிருந்த மின் கம்பங்கள், வர்த்த நிலையங்களையும் சேதப்படுத்தியுள்ளது. பஸ்ஸின் சாரதி, நடத்துநர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
