‘குழந்தைகளை பாதுகாப்போம் குழந்தைகளை சமமாக மதிப்போம்’ எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு தீரனியம் பாடசாலையில்,
தீரணிய மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றன.
சிறந்த பிரஜைகளை உருவாக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட தீரணியர்களின் பாடசாலை இயக்குனரும் சிரேஸ்ட உளநல வைத்தியருமான வைத்தியர் ஜூடி ரமேஷ் ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன் கலந்து கொண்டார்.
மாணவர்களின் கலை,கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. அன்பு சகோதரர்கள் சபையின் மேலாளர் அருட் சகோதரர் ஸ்டீபன் மெத்தீவ், தீரனியம் பாடசாலையின் தீரணிய மாணவர்களின் நடத்தை மற்றும் சிகிச்சையாளர் வைத்தியர்சகாய தர்ஷினி ஜூடி ரமேஷ் ஜெயக்குமார், பாடசாலை அலுவலகத்தில் உத்தியோகத்தர் ரெஜிதாரணி பெனடிக் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.