தீயசக்திகளின் செயற்பாடுகளுக்கு இடங்கொடாது ஒற்றுமையுடனும் சகோரத்துவத்துடனும் சமய நல்லிணக்கத்துடனும் தொடர்ந்து முன்னோக்கி பயணித்து எமது வருங்கால சந்ததியினருக்காக வளமான எதிர்காலத்தினை உருவாக்க அனைவரும் ஒன்றினைந்து செயற்பட முன்வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.