மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேசத்தில் உள்ள நெடியமடு,ஆயித்தியமலை கிராமங்களில் காட்டு யானைகளால், குடியிருப்புகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு நெடியமடு கிராமத்திற்குள் புகுந்த யானைகள், விவசாயிகள் இருவரின் வீடுகளைச் சேதமாக்கியதுடன், வீட்டில் களஞ்சியப்படுத்தப்பட்;ட
நெல், சோளம் போன்ற தானியங்களையும் சேதப்படுத்தியுள்ளன.
விவசாய காணிகளில் காணப்பட்ட மரக்கறிகளையும் யானைகள் அழித்துள்ளன.
இன்று அதிகாலை ஆயித்தியமலை பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் வீடொன்றைச் சேதப்படுத்தின.
சேத விபரங்களை நெடியமடு கிராம சேவகர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம் ஆகியோர்
பார்வையிட்டனர்.