26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.மாவட்ட விவசாயிகளுடனான
கலந்துரையாடல்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடியான நிலையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள், அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது மற்றும் மாவட்டத்தின் விவசாயத்திற்கான எதிர்கால திட்டங்கள் அதற்கான ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளும் வகையில் மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக, கைத்தொழில் விவசாய சம்மேளத்தின் விவசாயத்திற்கான பணிப்பாளர் ரமேஸ் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக, கைத்தொழில் விவசாய சம்மேளத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்டத்தின் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள், அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது, மாவட்டத்தின் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கான எதிர்கால திட்ட வரைபு அதற்கான விவசாய உள்ளீடுகள் போன்ற பல விடயங்களை கலந்தாலோசிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக, கைத்தொழில் விவசாய சம்மேளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எரிபொருள் பற்றாக்குறை உட்பட காட்டு யானைகளின் அபாயம் தொடர்பிலும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வெண்டும் என விவசாயிகள் இதன்போது வலியுறுத்தினர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles