யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், நெற் செய்கையில், தத்திகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி தெரிவித்துள்ளார்.
மழையுடனான காலநிலை காரணமாக, யாழ்ப்பாணத்தில், நெற் செய்கையில், கபில மற்றும் வெண் முதுகுத்தண்டு தத்திகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது, நெற்பயிர் செய்கையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
அதனையடுத்து, விவசாயத் திணைக்கள கள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாய உதவிப் பணிப்பாளர்கள், இன்று, யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, தத்திகளின் தாக்கம் தொடர்பில், விவசாயிகளுக்கு தெளிவூட்டல்களை வழங்கியுள்ளனர்.