மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து ‛இண்டியா ‘ கூட்டணி கட்சியினருடன் நாளை (05) நடக்கும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தெலுங்கு தேசம், ஐ.ஜ.த. கட்சியை அழைப்பது குறித்து நாளை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆட்சி அமைப்பதற்கு எங்களுக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே மெலிதான கோடு மட்டுமே உள்ளது.
வயநாடு, ரேபரேலியில் எந்த தொகுதியை இராஜினாமா செய்வது தொடர்பாக ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். ‛இண்டியா’ கூட்டணி ஆட்சி அமைக்க எங்களிடம் வியூகம் உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ”இதுகுறித்து கார்கே தெரிவிக்கையில், எங்களின் எல்லா யுக்திகளையும் சொல்லிவிட்டால் மோடி உஷார் ஆகிவிடுவார். கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” – என்றார்.