இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (13) முறைப்பாடு செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று முற்பகல் 11.00 மணியளவில் பல ஆவணங்களுடன் அமைச்சர் தனது முறைப்பாட்டைக் கையளித்துள்ளார்.