பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளனர்.
திவுலபிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மீரிகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் சில காலம் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடந்த 15 ஆம் திகதியின் பின்னர் பணிக்கு திரும்பவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.