32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !

நிலவும் மழையுடனான வானிலையால் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பதுளை மாவட்டத்தின் ஹாலி எல பிரதேச செயலக பிரிவிற்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கண்டி மாவட்டத்தின் தும்பனே யட்டிநுவர மற்றும் பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவு, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய மற்றும் பஸ்கொட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரங்கெத்த மற்றும் வலப்பனை பிரதேச செயலக பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, பலாங்கொடை, நிவித்திகல, இம்புல்பே மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles