வீதி விபத்துக்களில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 417 பேர் உயிரிழந்துள்ளதாக, போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் “இந்திக்க ஹப்புகொட” தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் சுமார் 1000 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் உயிரிழப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் விபத்துகளில் மூன்றில் ஒன்று மோட்டார் சைக்கிள் விபத்து எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 10 வரை, 1,352 ஆபத்தான வீதி விபத்துகளில், 1,417 பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்ட அவர், கடந்த வருடம் 328 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.