30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘அமைதிக்காக,நீதிக்காக நடக்கின்றோம் ‘
எனும் தொனிப்பொருளில் நடைபயணம்

‘அமைதிக்காக,நீதிக்காக நடக்கின்றோம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள மக்களுக்கான நியாய தொடர் நடைப்பயணத்தின் 37ஆவது நாள் நேற்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

‘இன்றைய நாள் மீண்டும் நிகழாதிருக்க நினைவுகள் முக்கியம் அது எங்கள் உரிமை ஆகும்’ எனும் தொனிப்பொருளில் 37ஆவது நாள் நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.

37ஆவது நாளினை சிறப்பிக்கும் வகையில் ‘மீண்டும் நிகழாதிருக்க நினைவுகள் முக்கியம் அது எங்கள் உரிமை ஆகும்’ எனும் ஜனநாயகத்திற்கான தொடர் பயணத்தில் மக்களினால் கலை கலாசாரங்கள் வெளிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பசியின்றி ,பிணியின்றி ,கல்வி ,சுகாதாரம் என அடிப்படைதேவைகளை
பூர்த்தி செய்யப்பட நிம்மதியான வாழ்வே எமக்கு தேவை,இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையில் நாட்டை மீட்டெடுக்க அமைதியான ஜனநாயகத்திற்கான நியாய தொடர் நடைப்பயணம் மட்டக்களப்பு நகரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles