மட்டக்களப்பு மேற்கு உன்னிச்சை அரசினர் தமிழ் கழவன் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் நடைபெற்றது. சிறுவர்களையும் முதியவர்களையும் கௌரவிக்கும் வகையில் ‘சிறுவர்களின் எதிர்காலம் முதியவர்களைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அனுமதியுடன், பிரதி அதிபர் இரஞ்சிதராசாவின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் ஆயித்தியமலை பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணுசரணையுடன் இந்நிகழ்வுகள் நடைபெற்றது. இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என்பன நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து முதியவர்கள் பாடசாலை சமுகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.