4-வது வார சனிக்கிழமை விடுமுறை அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வருவதால் வங்கிகள் 5 நாட்கள் இயங்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது. சென்னை வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது காலிப் பணியிடங்களை நிரப்புவது நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தரத்தீர்வு காண்பது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கம் மும்பையில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 30 (திங்கட்கிழமை)இ 31 (செவ்வாய்க்கிழமை) -ந்தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்தது. அதன்படிஇ வருகிற 30, 31-ந்தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாட்களான இன்று (வியாழக்கிழமை) குடியரசு தினவிழா விடுமுறை நாளை மறுதினம் 4-வது வார சனிக்கிழமை விடுமுறை அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வருவதால் வங்கிகள் 5 நாட்கள் இயங்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இடைப்பட்ட நாளான நாளை (வெள்ளிக்கிழமை) மட்டுமே வங்கிகள் செயல்படும். வேலைநிறுத்தம் வழக்கமான விடுமுறை நாட்கள் என மொத்தம் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழல் ஏற்பட்டு இருப்பதால்இ வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் எனத்தெரிகிறது