நீதிக்காக குரலெழுப்புவோர் கைது செய்யப்படுகின்றனர் என்கிறது இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கம்

0
225

கல்வியமைச்சின் வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது, கைது செய்யப்பட்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் நீதிக்காக குரல் எழுப்புவோரை விடுதலை செய்யுமாறு இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் உப தலைவர் ஜீவராசா ரூபேசன் வலியுறுத்தியுள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.