26.3 C
Colombo
Sunday, May 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நுவரெலியாவில் இரத்ததான முகாம்!

நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் ஏற்பாட்டில் ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

நுவரெலியா றோட்ரிக் கழக அனுசரணையுடன், கல்லூரியின் அதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான நிகழ்வில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர், தாதிய உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

குருதிக்கொடை வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles