பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை, 30 வீத சலுகை அடிப்படையில் வழங்க, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்தவகையில், பாடசாலை மாணவர்கள், அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை, சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் எனக்குறிப்பிட்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அப்பியாசக் கொப்பிகளை, அடுத்த வாரம் முதல், நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில், கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்தார்.