கதிர்காமம் சென்று திரும்பியவர்கள் விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம்

0
148

கதிர்காம யாத்திரை சென்று திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டியொன்று வேககக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.