லொறியில் கைப்பை சிக்கியதில் பெண் உயிரிழப்பு

0
77
நிட்டம்புவ, வத்துபிட்டிவல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பை லொறியில் சிக்கி விபத்துக்குள்ளானதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
லொறியில் கைப்பை சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி வீழ்ந்த பெண் குறித்த லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 54 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.