2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிறிமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் காலி மார்வெல்ஸ் அணியின் சார்பில் பானுக ராஜபக்ஷ 82 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய 185 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 15.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் றிலே ரொசோ ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 106 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடராட்ட நாயகனாகவும் றிலே ரொசோ தெரிவுசெய்யப்பட்டார்.