26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு பேத்தாழை கலைமகள் முன்பள்ளியில் கல்வி கண்காட்சி

மட்டக்களப்பு பேத்தாழை கலைமகள் முன்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நேக்கில் கல்வி கண்காட்சி இன்று சிறப்பாக இடம்பெற்றது.
மொழி, ஆக்கம், அழகியல், தொடர்பாடல் சாதனங்கள் உள்ளிட்ட விடயங்கள் இயற்கை பொருட்களை கொண்டு கைப்பணி திறன் மூலம் மாணவர்களினால் தயாரிக்கப்பட்டு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.

கண்காட்சியில் சிறுவர் நூலகப் பகுதி, சந்தைப் பகுதி, கணினி தொடர்பாடல் சேவை, கடல் வழி போக்குவரத்து போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.
முன்பள்ளி அதிபர் திருமதி ஹேமலதா யேசுரெட்ணம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் திருமதி ரோகினி விக்னேஸ்வரன் கலந்து கெண்டதுடன், கௌரவ அதிதிகளாக கல்குடா கல்வி வலய ஆரம்ப கல்வி பிரதி கல்விப்பணிப்பாளர் சீ.தயாளசீலன், கோறளைப்பற்று பிரதேச செயலக சிறுவர் நன் நடத்தை உத்தியோகத்தர் அ.அழகுராஜ் ஆகியோர் உட்பட கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles