கிழக்கு மாகாண பிரச்சனைகளை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் சமூக மட்ட அமைப்பினருக்கும் கிராமமட்ட குழு பிரதிநிதிகளுக்கும், தாம் தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்தனர்.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வளவாளராக சட்டத்தரணி அசாத் முஸ்தபா பங்கேற்றார். சமூக மட்டத்தில் செயற்படுகின்ற அமைப்பினர், கிராமமட்ட குழு பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் செயமலர்வில் கலந்து கொண்டனர்.