ஒக்டோபர் 13ம் திகதி, மின்னஞ்சல் ஊடாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமைக்கான, வரவு-செலவு அறிக்கையினை, தமிழ்ப் பொதுக்கட்டமைப்பு, ஆணையகத்தில், சமர்ப்பித்துள்ளதாக, தமிழ்ப் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பொதுவேட்பாளரை, நிறுத்திய தரப்புக்கள், ஆணையகத்தில், வரவு-செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், எமது செய்திப் பிரிவு எழுப்பிய கேள்விக்கே பா.அரியநேத்திரன் இவ்வாறு பதிலளித்தார்.