நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முக்கிய நாயகனாக பார்க்கப்படுபவர்.
இவரது நடிப்பில் அயலான் என்ற திரைப்படம் தயாராகி இருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
ஏலியனுடன் இணைந்து வாழும் கதாநாயகனின் கதையாக டீஸர் மூலம் தெரியப்படுகிறது, ஆனால் படம் வந்தே பிறகே எப்படிபட்ட கதை என்று தெரியும்.
சில வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட இப்படம் பண பிரச்சனையால் பல தடங்கல்களை சந்தித்து வருகிறது. ஆனால் ஒருவழியாக பட பிரச்சனைகள் முடிவடைந்து 2024 பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியாக இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட இப்படம் பண பிரச்சனையால் பல தடங்கல்களை சந்தித்து வருகிறது. ஆனால் ஒருவழியாக பட பிரச்சனைகள் முடிவடைந்து 2024 பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்கவில்லை என செய்திகள் உலா வந்த நிலையில் நடிகரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில்இ படமா, சம்பளமா என்று பார்த்தால் படம் தான் என்று தோன்றியது.
தமிழ் சினிமாவில் இந்த பட்ஜெட்டில் இப்படியொரு படம் எடுக்க முடியும் என்பதை காட்ட வேண்டும். தயாரிப்பாளரும் பெரிய கஷ்டத்தை சந்தித்து வருவதால் சம்பளம் வேண்டாம் என நடித்துக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.
ஒரு கதை வர சிவகார்த்திகேயன் சம்பளமே இல்லாமல் நடித்திருப்பதை கண்டு ரசிகர்கள் வியக்கின்றனர்.