புலனாய்வு ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன எழுதிய ‘ஒரு வன்முறை அரசின் ஆரம்பம் 1981 யாழ்ப்பாணத்தை தீயிடுதல்’ நூலின் அறிமுகமும் உரையாடலும் இன்று மட்டக்களப்பு கோட்டைமுனை மெதடிஸ்த ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 43 ஆண்டுகளுக்குப் பின் சிங்கள மொழியில் எழுதப்பட்ட இன் நூல் முதல் முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. செல்லையா மனோரஞ்சனின் மொழி பெயர்ப்பில் பெண்களின் தொழில் பூங்கா ஜெ.காயத்திரி தொகுப்பில் சமூக செயல்பாட்டாளர் எஸ்.கமலேஸ்வரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் செங் கதிரோன் கோபாலகிருஷ்ணன், சமூக செயல்பாட்டாளர் தோமஸ் தந்தையா மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள்,
பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்