போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படவில்லையாம்!

0
165

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட  போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இதுவரை இலங்கைக்கு வரவில்லை.

இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கு இன்டர்போல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ  தெரிவித்துள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இன்டர்போலின் (சர்வதேச பொலிஸ்) உதவியைக்  கோருவது தொடர்பில் இதுவரை சட்ட ஆலோசனைகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதைப் போன்று அவருக்கு எதிராக சர்வதேச பிடியாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.  

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவருக்கு  எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.