மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 63கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 03 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
கடந்த 14நாட்களில் ஆரையம்பதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் 42கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.