‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 210 ஆண்டு நிறைவிணை முன்னிட்டு, கல்லூரியின் 2005ம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் ஷஷஇரத்த தான முகாம் இன்று இடம்பெற்றது.
மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் 2005ம் ஆண்டு உயர்தர மாணவர்கள், பாடசாலை சமூகத்தினர், கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்துகொண்டு குருதிக்கொடையளித்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து இரத்தான நிகழ்வு நடைபெற்றது. இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் விவேக், இரத்த வங்கி பிரி, பொதுசுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசல் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு ,தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .