30 C
Colombo
Monday, May 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிஃபா உலகக் கிண்ண போட்டிகள் 104 ஆக உயர்வு

2026 பிஃபா உலகக் கிண்ணத்தில் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 64இல் இருந்து 104ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் இணைந்து நடத்தும் போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகளின் எண்ணிக்கை 32 இல் இருந்து 48ஆக அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் நான்கு அணிகளைக் கொண்ட 12 குழுக்களில் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதில் புதிதாக 32 அணிகள் கொண்ட சுற்று ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளுடன் மூன்றாம் இடம் பிடிக்கும் சிறந்த எட்டு அணிகளும் தகுதி பெறும்.

இதன்படி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் மற்றும் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கிண்ணத்தில் மொத்தமாக எட்டுப் போட்டிகளில் ஆடவுள்ளன. நடைமுறையில் உள்ள அட்டவணையில் அது ஏழு போட்டிகளாகவே உள்ளன.

ருவண்டாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பீஃபா குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

அடுத்த உலகக் கிண்ணம் அமெரிக்காவில் 11, மெக்சிகோவில் மூன்று மற்றும் கனடாவில் இரண்டு என மொத்தம் 16 நகரங்களில் நடைபெறவுள்ளன.

Related Articles

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான குழாம்களை ஐ.சி.சி. உறுதிப்படுத்தியது

அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான குழாம்களை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: தலை சிதைந்து ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்தபோது அவர் மீது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார்...

‘இது ஓரு பரீட்சை நலையம்’ தமிழுக்கு வந்த சோதனை!

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் கா.பொ.த சாதாரண பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.நாட்டில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்தவருடம் மார்கழி மாதத்தில் நடத்தப்படவேண்டிய பரீட்சையானது 2023 மே மாத இறுதியில் இடம்பெறுகின்றது.இன்று காலை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான குழாம்களை ஐ.சி.சி. உறுதிப்படுத்தியது

அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான குழாம்களை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: தலை சிதைந்து ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்தபோது அவர் மீது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார்...

‘இது ஓரு பரீட்சை நலையம்’ தமிழுக்கு வந்த சோதனை!

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் கா.பொ.த சாதாரண பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.நாட்டில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்தவருடம் மார்கழி மாதத்தில் நடத்தப்படவேண்டிய பரீட்சையானது 2023 மே மாத இறுதியில் இடம்பெறுகின்றது.இன்று காலை...

ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்தது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.இதன்படி இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் விற்பனை விலை...

அநுரவின் அறகலய?

அடுத்த மாதம் 8ஆம் திகதி பிறிதோர் அறகலயவை ஆரம்பிக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் (ஜே. வி. பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டுவரும்...