மலையக மக்களின் இரத்ததினை உறுஞ்சி சுகபோகம் அனுபவித்து வந்த தொண்டமான் பரம்பரையினர், இன்று கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சுரண்டி வாழும் நிலையுள்ளதாகவும் அதனை ஜனாதிபதி ஒருபோதும் அனுமதிக்க கூடாது எனவும் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.