அம்பாறை சாய்ந்தமருதுப் பகுதியில் பார ஊர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இன்று விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியே விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் 41 வயதையுடைய சம்மாந்துறை பகுதியை சேர்ந்த ஆப்தீன் நௌசாத் என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.