28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உண்மை, ஒற்றுமை மற்றும்நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதிகள், மகா மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் அசங்க குணவன்ச உள்ளிட்ட அதிகாரிகள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதிகளை, அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களிடம் கையளித்துள்ளனர்.

சட்டமூலத்திற்குப் பாராட்டு தெரிவித்த மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியத் தரப்புப் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர், இதனை மேலும் பரிசீலனை செய்து, பொது நிலைப்பாட்டை அறிவிக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகச் செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பில், அதிகாரிகள், மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்தனர்.

இந்த நிகழ்வில், மகவெல ரதனபால தேரர், முருத்தெனியே தர்மரதன தேரர் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை இடைக்கால செயலகத்தின் பிரிவு தலைவர் சி.வை.தங்கராஜா, மக்கள் தொடர்பு நிறைவேற்று அதிகாரி தனுஷி டி சில்வா, சிரேஷ்ட சட்ட நிறைவேற்று அதிகாரிகளான யஸ்மதா லொகுனாரங்கொட, துலான் தசநாயக்க, இணைப்பாளர் டி.கொத்தலாவல ஆகியோர் பங்கேற்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles